BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Friday, May 9, 2014

பிஷப் கால்டுவேல் தமிழறிஞரா? தமிழுக்கு தொண்டு செய்தாரா? இதில் மட்டும் அதிமுக, திமுக போட்டாபோட்டி ஏன்?

பிஷப் கால்டுவேல் தமிழறிஞரா? 
தமிழுக்கு தொண்டு செய்தாரா?
இதில் மட்டும் அதிமுக, திமுக போட்டாபோட்டி ஏன்?

பிஷப் ராபர்ட் கால்டுவேல் தமிழறிஞராகவும், தமிழை உயர்தனி செம்மொழியாக உணர்த்தியவர் என்று  திமுக தலைவர் கருணாநிதி கூறியவந்த பொய் மூட்டையை, இப்போது அதிமுகவும் வழிமொழிய முந்துகிறது. ஏன்? இவர்களது நோக்கம் யார் கிறிஸ்தவர்களின் ஓட்டை அள்ளுவது என்பதில்தான் இருக்கிறது.
பிஷப் கால்டுவெல், தமிழ் படித்ததன் காரணம் கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்கும், இந்துக்களை மதமாற்றம் செய்யவும், தமிழக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ஆங்கிலேயன் தொடர்ந்து இங்கு ஆட்சி செய்யவும் தான்.  அதனாலேயே ஆரிய-திராவிட இனவாதம் எனும் மோசடி விஷத்தை விதைத்தவர்.
இப்படியே போனால் திமுகவும், அதிமுகவும் மெக்காலேவுக்கும் கூட விழா எடுக்க தயங்கமாட்டார்கள்.  மெக்காலேவால் தமிழக மக்கள் கல்வி அறிவு பெற்றனர் என்றுகூட வாதிடுவார்கள்.
இவர்கள் தமிழறிஞர்களுக்கு மரியாதை செய்பவர்களா? என்றால் இல்லை என்பதே பதிலாகும். கடந்த காலங்களில் யார் யாருடைய நூற்றாண்டு விழாவை எல்லாம் திமுகவும், அதிமுகவும், அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை என்பதற்கு பெரிய பட்டியலே இருக்கிறது. உதாரணமாக மு.வரதராசனார், வையாபுரி பிள்ளை, ஔவை துரைசாமி பிள்ளை, புலியூர் கேசிகன் என பலரைக் குறிப்பிடலாம். இவர்கள் செய்த தமிழ்த்தொண்டை அங்கீகரிக்க தமிழகத்தை ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் முன்னெடுக்கவில்லை. ஏன்? இவர்கள் பின்னால் ஓட்டு வங்கி உள்ள மிஷனரிகள் இல்லையே!
தமிழ்த் தாத்தா எனப்போற்றப்படும் உ.வே.சா.வின் பெயரை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கோ, அல்லது பல்கலைக்கழகத்திற்கோ வைக்கவில்லை. அவர் மட்டுமல்ல, இன்னமும் பல தமிழறிஞர்களை மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள், மறைக்கப்பட்டுள்ளார்கள். உதாரணமாக தணிகை செங்கல்வராயர், அவர் தனி ஒரு மனிதராக செய்த தமிழ்த்தொண்டை, இன்றும் ஒரு பல்கலைக்கழகத்தால்கூட செய்ய முடியாது!
பிஷப் கால்டுவெல், தமிழை மட்டுமல்ல, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளையும் படித்து பாண்டியத்தியம் பெற்றார். ஆனால் கேரளாவிலோ, கர்நாடகாவிலோ அவரை கொண்டாடவில்லை!
தமிழ் செம்மொழி என்பதை கால்டுவெல் கூறினார் என்பதற்கு எந்தவித ஆதாரம் கிடையாது. வழக்கம்போல் கருணாநிதி அவர்கள் கதைக்கும் விஷயமே இது.
தமிழ் மொழியை வைத்து அரசியல் நடத்துவது திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கைவந்த கலை. ஆனால், தமிழர்களை கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்ற சேவைக்குப் பலியாக்க வேண்டாம் என்று இந்து முன்னணி எச்சரிக்கிறது. தமிழ் மீது இவர்களுக்கு உண்மையில் பற்று இருக்குமானால், உண்மையான தமிழறிஞர்களுக்கு மரியாதை செய்யுங்கள், போற்றுங்கள் அது வருங்கால இளைய சமுதாயத்திற்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
 
(இராம கோபாலன்)

Post a Comment

 
Copyright © 2013 கலக்கக்குரல்
Shared by WpCoderX